கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 2 அரியவகை இரண்டு உடும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் ஏர் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது ஒரு பயணியின் உடமையை சோதனை செய்த பொழுது அதில் இரண்டு உடும்புகள் இருந்தது தெரியவந்துள்ளது .
அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த உடும்புகள் என்ன வகையான உடும்புகள், அது எப்படி கடத்திவரப்பட்டது, யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் சுங்கத்துறை அதிகாரிகள் உடும்பை கடத்தி வந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.