Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஊராட்சி மன்ற தலைவரும், தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளருமான சன்னாசிப்பட்டி பாரதிதாசன் மீது திருட்டு வழக்கு பதிவு. நடவடிக்கை எடுப்பாரா பிரேமலதா விஜயகாந்த் ? மன்ற தலைவரும், தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளருமான சன்னாசிப்பட்டி பாரதிதாசன் மீது திருட்டு வழக்கு பதிவு. நடவடிக்கை எடுப்பாரா பிரேமலதா விஜயகாந்த் ?

0

'- Advertisement -

திருச்சி மாத்தூர் கிராமம் சன்னாசி பட்டியை சேர்ந்த முத்து கருப்பு உடையார் என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 67) இவர் திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் மாத்தூர் கிராமத்தில் சர்வே எண் 187 உள் பிரிவு எண் 14B2A2 பட்டா எண் 3039 என்ற என் கொண்ட 1.26/1/2 செண்டு நிலத்தில் உள்ள ரூ.2 லட்சம் மதிப்புள்ள 300 சீமை கருவேல மரங்களை கடந்த 9.5.2025 ஆம் தேதி அன்று யாருக்கும் தெரியாமல் அத்துமீறி நிலத்திற்குள் நுழைந்து சன்னாசிப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளருமான பாரதிதாசன் தனது ஆட்களை வைத்து வெட்டி திருடி விற்று உள்ளார். ஆறுமுகம் அளித்த இந்த புகாரின் பேரில் இன்று மாலை திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிதாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

 

திருச்சி முக்கிய அமைச்சரின் பினாமியாக செயல்படும் மாத்தூர் கருப்பையாவின் மச்சினன் தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் ஆவார் . இவர் தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தாலும் இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள திமுகவை சேர்ந்த ஒப்பந்ததாரர் மாத்தூர் கருப்பையா அலுவலகத்தில் தான் எப்போதும் இருப்பார் .

 

திமுக சார்பில் திருச்சியில் நடைபெறும் அனைத்து பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷனை முறைப்படி பெற்று தருவது தேமுதிகவை சேர்ந்த இந்த பாரதிதாசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது .

 

Suresh

இவரின் பேரில் இன்று JM 3 குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது .

திமுகவினருக்கு கமிஷன் வாங்கி தரும் சன்னாசிப்பட்டி பாரதிதாசன் மீது நடவடிக்கை எடுப்பாரா பிரேமலதா விஜயகாந்த் ?

உண்மையான தேமுதிகவினர் எதிர்பார்ப்பு

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.