திருச்சி செந்தனீர்புரத்தில் தனியார் கம்பெனி மேனேஜரிடம் நகை பறித்த
2 பேர் கைது . ஒருவருக்கு வலை .

சென்னை சாலிகிராமம் நேரு நகரை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரன் (வயது 59) இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மண்டல மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அந்த கம்பெனியின் திருச்சி கிளைக்கு வருகை புரிந்த சுபாஷ் சந்திரன் செந்தண்ணீர் புரம் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மூன்று மர்ம ஆசாமிகள் சுபாஷ் சந்திரனிடம் செலவுக்கு பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் பணத்தை தர மறுப்பு தெரிவித்ததால் சுபாஷ் சந்திரன் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சுபாஷ் சந்திரன் பொன்மலை காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்திற்கிட மாக சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் பெயர் சந்தோஷ் குமார் (வயது 25) பாலமுருகன் (வயது 35 )என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து ஒரு பவுன் நகையை மீட்டு உள்ளனர்.மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.