திருச்சி அரியமங்கலத்தில் 2வது மனைவி இறந்த துக்கத்தில் 65 வயதுக்காரர் தற்கொலை.
திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மனைவிகள் உள்ளனர்.முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள். உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து சென்று விட்டார் .இதைபடுத்து கடந்த பல வருடங்களுக்கு முன்பு செல்வராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டாவது மனைவி இறந்து விட்டார்.
இதையடுத்து செல்வராஜ் கடந்த மூன்று மாத காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த செல்வராஜ் விட்டத்தில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை என்ன ஜாதி என்ன ஆச்சு வருகின்றனர்
.