திருச்சி மாவட்டம் முசிறியில் வசித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவி வெளியான பொதுதேர்வு முடிவுவில் 500க்கு 461 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இந்த மாணவியின் தந்தை சமூக அறிவியல் தேர்வின் போது உடல்நலக் குறைவினால் காலமானார்.

இருப்பினும் தன் தந்தை உயிரிழந்த நிலையில் அந்த துயரை பொறுத்துக் கொண்டு மாணவி தேர்வு எழுத சென்றார். தன்னுடைய தந்தையின் ஆசி என்றென்றும் தன்னுடன் இருக்கும் என்று கூறிவிட்டு மிகுந்த மன வேதனையுடன் சிறுமி தேர்வு எழுதிய நிலையில் தற்போது 461 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
மேலும் தந்தையை இழந்த சோகத்திலும் தேர்வு எழுதிய நிலையில் நல்ல மதிப்பெண்களும் பெற்ற மாணவி சஞ்சனாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர் .