Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காதர் மைதீன் தலைமையில் புதிய மார்க்கெட்டில் விசாலமான கடைகள் அமைத்து தரக்கோரி அமைச்சர் நேருவிடம் நேரில் மனு .

0

'- Advertisement -

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம் கே எம் காதர் மைதீன் தலைமையில் இன்று காலை அமைச்சர் கே என் நேருவை இன்று காலை நேரில் சந்தித்து 25 வியாபாரிகள் தங்கங்கள் சார்பில் மனு அளித்தனர் .

 

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது :-

 

 

நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை (தமிழ்நாடு) கே என் நேரு அவர்களே

 

 

1.வருகிற 09.05.2025 அன்று நமது தமிழகமுதல்வர் அவர்கள் திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்புவிழா மற்றும் அறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் திறப்புவிழா ஆகியவற்றிற்கு எங்களது காந்திமார்க்கெட் வியாபாரிகளின் கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

2.

Suresh

மேலும், அதே நாளில் (09.05.2025) பஞ்சப்பூர் பசுமை பூங்காவில், புதிதாக அமையவுள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாகத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ள தமிழக முதல்வர், மற்றும் நமது மாவட்டத்தின் நலம் விரும்பியானா எங்களது அமைச்சர் தாங்களையும் வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால்,

திருச்சி காந்திமார்க்கெட்டில் 25 வியாபார சங்கங்கள் ஒன்றிணைந்து உருவாகியுள்ள எங்களது வியாபார கூட்டமைப்பின் நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து, சுமார் 2300 மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்றவாறு நல்ல விசாலமான வசதிகளுடன் கூடிய கடைகள் அமைத்து தருமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். என தெரிவித்துள்ளனர் .

 

இந்த நிகழ்வில் காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார கூட்டமைப்பின் நிர்வாகிகள் கந்தசாமி, வெங்கடாசலம், கருப்பையா, பாலசுப்பிரமணி , கண்ணதாசன், முகமது சபி , ராஜா , எஸ்.பி. பாபு , கலிலூர் ரகுமான் அப்துல் ஹக்கீம் மற்றும் பலர் உடன் இருந்தனர் .

 

வியாபாரிகள் அளித்த மனுவை கனிவுடன் பரிசலித்த அமைச்சர் கே என் நேரு  தமிழக முதல்வர் ஒன்பதாம் தேதி  மார்க்கெட்டை திறந்து வைத்த பின்  வியாபாரிகள் உங்களை அனைவரையும் அழைத்து கலந்த ஆலோசிட்ட பின்னரே மார்க்கெட் செயல்படும் என உறுதி அளித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும்  அமைச்சர் கே என் நேரு மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோருக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.