திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
கத்தி முனையில் வாலிபரிடம் இருசக்கர வாகனம் பறிப்பு

2 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் விசுவாசபுரி 2-வது தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. (வயது 20) இவர் சம்பவத்தன்று மாலை தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு வேலூருக்கு சென்று விட்டு அவரது சொந்த ஊரான மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருச்சி -மதுரை பைபாஸ் சாலையில் நிறுத்தி உள்ளார். அவ்வழியாக இருசக்கர வாகனத்தை வந்த இரண்டு மர்ம நபர்கள் பட்டா கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் எடமலை பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.