Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காந்தி மார்க்கெட் கடைகளுக்கு லைசன்ஸ் புதுப்பித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் திருச்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி கோரிக்கை.

0

'- Advertisement -

சிவாஜி சிலை திறக்க நடவடிக்கை எடுத்த அரசுக்கும், அமைச்சருக்கும் காங்கிரஸ் சார்பில் நன்றி :

 

திருச்சி காந்தி மார்க்கெட் கடைகளின் உரிமத்தை புதுப்பிக்க நடவடிக்கை

 

மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வலியுறுத்தல்

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், கமிஷனர் சரவணன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் இன்று (ஏப்.29) நடைபெற்றது.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசியதாவது,

உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவு கலந்ததாக எதிர்க்கட்சினர் கடந்த வாரம் வதந்தியை பரப்பினர். ஆனால் நகராட்சி, நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு, மாநகர மேயர் அன்பழகன் ஆகியோர், மக்களை சந்தித்து குடிநீரில் எந்த பிரச்சினையும் இல்லை என தெளிவு படுத்தினர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

திருவானைக்காவல் பகுதியில் செயின் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், திருவாணைக்காவலில் ஒரு புதிய போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். ஸ்ரீரங்கம் பகுதி ரயில்வே கிராசிங் புதிய சிறு பாலம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்த திருச்சி எம்பி துரை வைகோவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

திருச்சி மகாத்மா காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் பெண்கள் அறுவை சிகிச்சை வார்டுகள் மற்றும் பிரசவார்டுகள் ஆகியவற்றில் பத்து பேன்களில் ஒரு பேன் மட்டுமே ஓடுகிறது. இந்த அவலத்திற்கு உரிய தீர்வு காண வேண்டும். மாநகரப் பகுதியில் அனைத்து வாடுகளிலும் தெரு ஓரங்களில் கேட்பாரற்று கொட்டப்படும் கழிவுகளை அகற்ற நடவடிக்கைகொ எடுக்க வேண்டும். மாநகர பகுதியில் டிரான்ஸ்பார்மர் சுற்றுப் புறத்தில் பொது மக்கள் குப்பைகளை கொட்டி வைக்கின்றனர். இது மக்களுக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே இவற்றை சுற்றி பாதுகாப்பு வே லி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மற்றும் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இவற்றிற்கு பதில் அளித்த மேயர், கட்டிடக்கழிவுகள் அப்புறப்படுத்துவதற்காக புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக நான்கு ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். . அரசு மருத்துவமனையில் பேன் ஓடாதது குறித்து டீன் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். டிரான்ஸ்பார்மர் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது. மேலும் மாமன்ற உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் ஆண்டாள், மதிவாணன் , துர்கா தேவி, விஜயலட்சுமி, ஜெயநிர்மலா ,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை கமிஷ்னர், நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

 

திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி:

(அதிமுக):

 

திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பழமையான மார்க்கெட்.இந்த மார்க்கெட்டில் 962 கடைகள் உள்ளன.காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு லைசன்ஸ் ஒன்பது வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுவது வழக்கம். வாடகை வருடத்திற்கு 5% என மூன்று வருடத்திற்கு ஒரு முறை 15% உயர்த்தப்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு மணிகண்டத்தில் புது மார்க்கெட் கட்டிய பிறகு காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு லைசன்ஸ் புதுப்பிக்கப்படவில்லை. ஆனால் பழைய முறைப்படி வாடகை வசூலிக்கப்படுகிறது. லைசன்ஸ் புதுப்பிக்கப்படுவது இந்த 2025 ஆம் ஆண்டு முடிகிறது. தற்போது தாழ்வாரம் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அளந்து 15 சதவீத வாடகை உயர்வு மட்டும் அல்லாமல் அனைத்து கடைகளுக்கும் கூடுதல் வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடைகளுக்கு முன்பு தாழ்வாரம் அமைத்துள்ள கடைகளுக்கு பொதுப்பணித்துறை சந்தை மதிப்பு படி வாடகை வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 2019 கொரோனாவுக்கு பிறகு காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் சற்று குறைந்துள்ளது. சந்தை மதிப்பு, கூடுதல் கட்டட அளவை வைத்து கூடுதல் வாடகை வரி வசூலிப்பதை நிறுத்த வேண்டும். வியாபாரிகளை அழைத்து பேசி தற்போதைய முறையில் வாடகை வசூலிக்க வேண்டும். மேலும் காந்தி மார்க்கெட் கடைகளுக்கு லைசன்ஸ் புதுப்பித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .காந்தி மார்க்கெட் இங்கேயே தற்போது உள்ள இடத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அனைத்து கோரிக்கைகளுக்கும் மாநகராட்சி செவி சாய்க்குமா?

 

எல். ரெக்ஸ் (காங்கிரஸ்):

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையினை ஷோனா மீனா தியேட்டர் எதிரில் அமைக்கவேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையினை நிறைவேற்றிய அமைச்சர் நேருவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

பாதிமாபுரம், கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதியில் குடிநீர் சீராக வருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வக்கீல் கோவிந்தராஜன் ( காங்கிரஸ்):

 

இதுவரை திறக்கப்படாமல்இருந்த சிவாஜி சிலையை ரசிகர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கையை ஏற்று திறக்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கும் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ந.பிரபாகரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) :

 

Suresh

அரசு ஆவணங்கள், பொதுப் புழக்கத்தில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும்.

மண்ணின் ஆதிக் குடிகள் குறித்து தவறாக சித்தரிக்கும் வகையில் காலனி என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் இனி நீக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அப்பீஸ் முத்துக்குமார் (மதிமுக):

திருவானைக்காவல் பகுதியில் கொலை கொள்ளைகள் அதிகரித்து வருகிறது எனவே அப்பகுதியில் தனி போலீசின் நிலையம் அமைக்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

 

காஜாமலை விஜய் ( திமுக ) :

 

எனது வார்டில் எந்த பணிகளும் நடப்பதில்லை. என்ன சொன்னாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

மதிவாணன் (மண்டல குழு தலைவர் ) :

 

எனது மண்டலத்தில் வார்டுகளில் உள்ள பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்கே பிரச்சனையாக உள்ளது .எனவே வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு காலியாக உள்ள கணினி ஆப்ரேட்டர் பணியிடத்தையும் உடனடியாக நிரப்பிட வேண்டும்.

 

விஜயலட்சுமி கண்ணன் (மண்டல குழு தலைவர்):

 

திருச்சி பட்டாபிராமன் சாலையில் இருபுறமும் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை அகற்றி மக்கள் நலனுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

முத்துச்செல்வம் (திமுக ) :

 

எனது வார்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது அங்கு தினமும் 2.5 லட்சம் குடிநீர் வழங்கப்படுகிறது .இதனால் வார்டில் உள்ள மற்ற வீடுகள் குடிசை பகுதிகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் கிடைப்பதில்லை. அவர்களும் முறைப்படி வரி கட்டுகிறார்கள். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

. எல்.ஐ.சி. சங்கர் (திமுக ) :

 

இந்த வருடம் பட்ஜெட்டில் பழைய இருபது வாட்ஸ் தெருவிளக்கு பதிலாக 40 வாட்ஸ் தெரு விளக்குகள் என்ற அறிவிப்பின்படி விரைவில் மாற்றித் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. புதிதாக புதை வடிகால் வாகனம் ரூபாய் மூன்று கோடியில் வாங்கிய வாகனத்தை நடைமுறையில் பயன்படுத்தும் வகையில் விரைவில் இயக்க பயன்படுத்தவேண்டும். காந்தி மார்க்கெட் நுழைவு முதல் சந்து கடை வரை, மணிமண்டபசாலை இளங்கன் மாரியம்மன் கோயில் முதல் வேப்பமரத்து கோயில் வரை இரவு நேர கடைகள் பொதுமக்களுக்கு இடைஞ்சலாகவும் அவசர மருத்துவ தேவைகளுக்கு செல்ல முடியாத அளவுக்கு உள்ளதை சரி செய்ய வழிமுறைப்படுத்த வேண்டும்.

 

இவ்வாறு விவாதம் நடந்தது.

 

சிவாஜி சிலை அமைப்பது குறித்து காங், திமுக உறுப்பினர்கள், மற்றும் மேயரும் அரசுக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், மேயர் பேசுகையில் 24 மணி நேரமும் தினசரி குடிநீர் வழங்கும் மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது. எதிர்வரும் காலத்தில் வீடுகள் தோறும் மீட்டர் பொருத்தப்பட்டால் குடிநீரின் பயன்பாடு குறைய வாய்ப்புள்ளது. அதன் பிறகு குடிநீர் விநியோகம் மேலும் சீராகும். விரைவில் வீடுகள் தோறும் புதை வடிகால் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அந்தந்த வார்டு உறுப்பினர்களும் அவரவர் வார்டுகளில் புதை வடிகால் இணைப்பு பணிகளை ஏற்படுத்த வீடுகள் தோறும் சென்று, அறிவுறுத்தி உரிய கட்டணங்களை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.