திருச்சி பஞ்சப்பூர் அருகே கார் மோதி வாலிபர் பரிதாப பலி. நண்பன் படுகாயம்.
இருசக்கர வாகனத்தில் சென்ற போது நடந்த பரிதாப சம்பவம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40), இவர் நேற்று தன் நண்பர் மண்ணசச்நல்லூர், எஸ்.கண்ணனூரை சேர்ந்த கோபிகிருஷ்ணணுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி – மதுரை நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார் . அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் இவர்களது இருசக்கர வாகனத்தின் பின்னே மோதியது. இந்த விபத்தில் இருவரும் துாக்கிவீசப்பட்டனர். கோபிகிருஷ்ணன் பலத்த காயமடைந்தார். அருகே இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். கோபிகிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இனாம் மணியாச்சியை சேர்ந்த ராஜ் அழகு மதன் (வயது 28) என்பவர் மீது வழக்கு பதிந்து காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.