Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் பணம் பறித்த பொன்மலையைச் சேர்ந்த பிரபல ரவுடி கைது .

0

'- Advertisement -

திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர், முதியவரிடம் பணம் பறித்த பொன்மலையைச் சேர்ந்த பிரபல ரவுடி கைது.

 

முதியவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர் .

 

Suresh

திருச்சி, கொட்டப்பட்டு, ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 51), ஆட்டோ ஓட்டுனர். சம்பவத்தன்று ஆட்டோவில் பொன்மலை, சாய்பாபா கோயில் வழியாக சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்து ரூபாய் ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பினார். இது குறித்து ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

 

இதேபோல் திருச்சி, மேல அம்பிகாபுரம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (வயது 51), நேற்று அரியமங்கலம், கல்லான்குத்து ரயில்வே பாதை வழியாக வந்தபோது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ.1000ம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார் .

 

இது குறித்து அப்துல் அஜீஸ் அளித்த புகாரின் பேரில் அரிமங்கலம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிந்து 2 முதியவர்களிடம் பணம் பறித்த பொன்மலை, முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (வயது 25) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 1 கத்தி, ரூ.500 பணம் மற்றும் 1 பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.