Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விபத்துக்குள்ளான சமயபுரம் கோயில் பக்தர்களை மீட்டு உதவி செய்த முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி

0

'- Advertisement -

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு துறையூரில் இருந்து திருச்சிக்கு திரும்பி வரும் வழியில் பெரமங்கலம் அருகே சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய பக்தர்கள் விபத்துக்குள்ளானதை அறிந்த உடன் காயமடைந்த ஐந்து நபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், மருத்துவர்களை உடனே தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.

 

மேலும் துறையூர் நகர செயலாளர் அமைதி பாலுவை அழைத்து விபத்துக்குள்ளான நபர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடுமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் சமயபுரம் ராமு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.