Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: ஒரு டன் புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்.3 பேர் கைது

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே ஒரு டன் எடையிலான புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா்.

 

மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

 

தொட்டியம் காவல் ஆய்வாளா் ஞானசேகரன் தலைமையிலான போலீஸாா் காட்டுப்புத்தூா் – சீலைபிள்ளையாா் புத்தூா் பிரிவு சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

 

இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கொண்ட விசாரணையில், தொட்டியம் வட்டம் காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜசேகா் (வயது 35), காட்டுப்புத்தூா் அருகே உள்ள சீத்தப்பட்டி கிராமத்தில் உள்ள கிடங்கில் இருந்து புகையிலை மூட்டைகளை கொண்டு வந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து போலீஸாா் ராஜசேகரனை அங்கு அழைத்துச் சென்று பாா்த்தபோது அங்கே 50-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சுமாா் ஒரு டன் எடையிலான, ரூ. 6 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

 

இச்சம்பவத்தில், தொட்டியம் வட்டம் எம். புத்தூா் அா்ஜுனன் (வயது42) மற்றும் பாலசுப்ரமணியன் (வயது 51), கரூா் நகரைச் சோ்ந்த சந்துரு (வயது 48) ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து, ராஜசேகா், அா்ஜுனன், பாலசுப்ரமணியன் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து துறையூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளை சிறையில் அடைத்தனா்.

மேலும் சந்துரு என்பவரைத் தேடி வருகின்றனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.