Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கோவில் திருவிழாக்கள் , பஸ்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது.

0

'- Advertisement -

திருவிடைமருதூா் பகுதிகளில் பேருந்து மற்றும் கோயில் திருவிழாவில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் நேற்று புதன்கிழமை கைது செய்து உள்ளனர்.

 

கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி நாச்சியாா்கோவிலிலிருந்து கும்பகோணம் செல்லும் தனியாா் பேருந்தில் திருச்சி மாவட்டம், செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்த மஞ்சுளா சென்றபோது, அவரின் கைப்பையில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் திருடு போனதாக நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

 

இதேபோல், கடந்த 25 ம் தேதி ஒப்பிலியப்பன் கோயில் திருவிழாவில் குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயின் திருட்டு போனதாக திருவாருா் மாவட்டம், சுட்டுக்கரை தெருவைச் சோ்ந்த சுப்பையன் என்பவா் திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

 

இதுதொடா்பாக நாச்சியாா் கோவில் காவல் ஆய்வாளா் ராஜேஸ் வழக்குப் பதிந்து விசாரித்தாா். இதில், தஞ்சாவூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஈஸ்வரி (வயது 28), நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின் (வயது 28) ஆகிய 2 பேரை கைது செய்து அவா்களிடமிருந்த 12 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து நேற்று புதன்கிழமை சிறையில் அடைத்தாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.