Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே கடன் சுமையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை .

0

'- Advertisement -

திருச்சி அருகே கடன் சுமையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் .

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கார்காத்தார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 36).

இவரது மனைவி அன்ன காமாட்சி (வயது 36) இந்த தம்பதியர் சமீபத்தில் கடன் தொகை பெற்று ஒரு வீடு வாங்கினர்.

பின்னர் அதற்கான தவணைத் தொகை செலுத்துவதில் கணவன் மனைவிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் கடன் சுமையால் கவலை அடைந்த பிரபாகரன் மன உளைச்சலில் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரது மனைவி அவரை மீட்டு முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் பிரபாகரன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மனைவி அன்னகாமாட்சி முசிறி காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பெயரில் முசிறி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.