Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சமயபுரம் கோயில் அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோன்டிய போது 9 அடி உயர துவாரபாலகர் சிலை கண்டடுப்பு

0

'- Advertisement -

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் இணைப்பு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது துவாரபாலகர் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் இணைப்பு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 9 அடி உயரமும் 2 அடி அகலம் உள்ள பழமையான கற்சிலை ஒன்று தென்பட்டது.

 

Suresh

இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கற்சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

 

.இதில் கோவில் நுழைவாயிலில் அமைக்கப்படும் துவாரபாலகர் கற்சிலை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து இந்த கற்சிலையை மீட்டு தொல்லியல் துறையினருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏராளமான பக்தர்கள் கற்சிலையை ஆர்வத்துடன் பார்த்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.