திருச்சி தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட
அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்
மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில்
அ.தி.மு.க.ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்து கூறி திண்ணை பிரச்சார நிகழ்ச்சி இன்று திருச்சி காட்டூர் பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் காட்டூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள வீடுகளிலும், கடைகளிலும் துண்டு பிரசாரங்களை விநியோகித்து அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி விளக்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ராஜமணிகண்டன் மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி, மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் .சுபத்ரா தேவி, ஒன்றிய செயலாளர்கள் இராவணன், எஸ்கே.டி.கார்த்திக்,
நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், பேரூர் செயலாளர் பி.முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அருண் நேரு, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட கலை பிரிவு செயலாளர் எம்.பி.ராஜா, மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள், மற்றும் வட்ட கழக செயலாளர்கள், ஜெயலலிதா பேரவை சார்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.