திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அன்பழகன். ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் அன்பழகன் தனது காரில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் இருந்து திடீரென புகை வெளியான நிலையில், கார் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் உடனடியாக அன்பழகன் காரை விட்டு கீழே இறங்க முயற்சித்தும் அவரால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சக வாகன ஓட்டிகள் கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்து அன்பழகனை மீட்க முயற்சிதும் முடியவில்லை. இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
திடீரென கார் முழுவதும் தீ மளமளவென பரவிய நிலையில், பொதுமக்கள் கண் முன்னாலேயே அன்பழகன் பற்றி எரிந்த காருக்குள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து அன்பழகனின் சடலத்தை மீட்டனர். சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.