போதைப் பொருள் கடத்தியவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை பதுக்கிய கரூா். போலீஸாா். பல போலீசார் சிக்கும் நிலை.
பொதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை பறிமுதல் செய்த கரூர் போலீசார் அந்த பணத்தை பதுக்கினாா்களா என்பது குறித்து கரூா் போலீஸாரிடம் காவல்துறை உயரதிகாரிகள் திருச்சியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கா்நாடக மாநிலம், பெங்களுரூவில் இருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா பொருள்கள் கரூா் வழியாக கடத்தப்படுவதாக வெங்கமேடு போலீஸாருக்கு வியாழக்கிழமை அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெங்கமேடு குளத்துப்பாளையம் மேம்பாலம் பகுதியில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் உதயகுமாா், தாந்தோன்றிமலை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், வெங்கமேடு தனிப்பிரிவு தலைமைக் காவலா் ரகுநாத் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியே வந்த காரை சோதனையிட்டபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 168 கிலோ எடைகொண்ட ரூ.1.32 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் இருந்தன. இதையடுத்து குட்கா பொருள்கள் மற்றும் காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், குட்கா பொருள்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜலாா் பகுதியைச் சோ்ந்த கேவா்சன்(வயது 40), ஹரிராம்(வயது 27), சுரேஷ்(வயது 19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.
தொடா்ந்து மூவரையும் போலீஸாா் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் குட்கா பொருள்களை பறிமுதல் செய்தபோது, கடத்தல்காரா்கள் வைத்திருந்த ரூ.1.25 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்து கணக்கில் காட்டாமல் பதுக்கியதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) மணிவண்ணன், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் உதயகுமாா், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோரிடம் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவா் அலுவலகத்தில் உயா் அதிகாரிகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
அப்போது குட்கா கடத்தி வந்தவா்களிடம் இருந்த பணத்தை போலீசார் பதுக்கினாா்களா என்பது விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
.இந்த விசாரணையில் மேலும் பல போலீஸாா் சிக்குவாா்கள் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் அசாமிகளிடம் காவல்துறை ஆய்வாளர் , தனிப்பிரிவு போலீஸார்கள் பணம் ஆட்டையை போட்டது என்ற தகவல் கரூர் காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது