திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க…
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 56-வது நினைவு நாளான 3.2.2025, திங்கட்கிழமை அன்று மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும், தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருஉருவப் படங்களை வைத்து மலர் அஞ்சலி செலுத்துமாறும்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கீழ்க்கண்ட இடங்களில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்கள் கலந்து கொள்கிறார்.

03.02.2025, திங்கட்கிழமை
காலை 9மணி: ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் பகுதி சார்பாக ராஜகோபுரம் அருகில்
காலை 9.30மணி: மண்ணச்சநல்லூர் எம்ஜிஆர், அம்மா சிலை அருகில்
காலை 10.15மணி: துறையூர்
காலை 11மணி: முசிறி கைக்காட்டி
அதுசமயம் தலைமை அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கை கூறப்பட்டுள்ளது.