Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்ஜிஆரின் 37வது நினைவு நாள்: திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க…

அதிமுக அமைப்பு செயலாளர்,
நாமக்கல் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி

அஇஅதிமுக நிறுவனத் தலைவர், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆர் அவர்களின் 37- வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்…

இன்று 24.12.2024, செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில்..

திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், அம்மா பேரவை மாநில இணை செயலாளரும் கவுன்சிலருமான அரவிந்தன், மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி , ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெரால்டு , துணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன் , பகுதி செயலாளர்கள் கலைவாணன், ரோஜர் , எம் ஆர் ஆர் முஸ்தபா , வட்ட செயலாளர்கள் டி எஸ் எம் செல்வமணி , வழக்கறிஞர்கள் சிவக்குமார், முல்லை மாரி , சேது மாதவன் , மற்றும் நிர்வாகிகள், டாஸ்மாக் பிளாட்டோ, பாலக்கரை ரவீந்திரன் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் சிலைக்கும் அவரது நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.