Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆசிய பென்காக் சிலாட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு குவிந்து வரும் பாராட்டு.

0

8வது ஆசிய பென்காக் சிலாட் போட்டி உஸ்பெகிஸ்தான் நாட்டில் கடந்த தேதி 09/10/2024- முதல் 16ம் தேதி வரை நடைபெற்றது .

இந்தப் போட்டியில் ஆசிய கண்டத்தை சேர்ந்த 16 நாடுகள் பங்குபெற்றது.

( இந்திய, மலேஷியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இரான், உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான் , துர்க்மெனிஸ்தான்,புர்ன்னே, வியட்நாம், கர்கள்பகிஸ்தான் , தாய்லாந்து, புட்டான் , தஜிகிஸ்தான் ,கிரிக்கிஸ்தான் )
*
போட்டியில் இந்தியாவில் இருந்து 36 வீரர்கள் கலந்து கொண்டனர்

இதில் இந்திய 12 – வெண்கலம். 2- தங்கம் 2- வெள்ளி பதக்கம் வென்று ஆசிய போட்டியில் 5ம் இடம்பெற்றது .

திருச்சியில் இருந்து இந்தியா அணியில் இரண்டு வீரர்கள் சண்டை பிரிவில் கலந்து கொண்டு இருவரும் வெண்கலப் பதக்கம் வென்றார்கள்

திருச்சி வீரர்கள்
த.கமலேஷ் – 95+ எடைப்பிரிவில் ( தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் – இயற்பியல் 3 ஆம் ஆண்டு)

மற்றும் ரா.அரவிந்த பிரகாஷ் – 90+ இடை பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சார்பில் சிலாட் போட்டியில் பங்கேற்று திருச்சிக்கு பெருமை சேர்த்த வீரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.