Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்

0

 

அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று.

இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. முன்னிலையில்..

ஓபிஎஸ் அணியின் முசிறி நகர கழக செயலாளர் நந்தினி V.சரவணன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அஇஅதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஓபிஎஸ் அணியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் எம்.ஜி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் கபிலன், முசிறி தொகுதி இணை செயலாளர் லலித்தா ரவீந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பிரேம்குமார், நகர கழக அவைத் தலைவர் மாணிக்கம், நகர கழக இணை செயலாளர் வேம்பரசி, வார்டு செயலாளர்கள் ஜாபர் அலி, விஜய், சத்தியபாலு, குமரவேல், வார்டு துணை செயலாளர் மீசை குமார், மாவட்ட விவசாய பிரிவு துணை செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கழகத்தில் இணைத்து கொண்டனர்.

உடன் முசிறி நகர கழக செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜெ.அறிவழகன் விஜய், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏவூர் நாகராஜன், வழக்கறிஞர் வெங்கடேசன், முசிறி ஆனந்த், மைக்கேல்ராஜ்
தயனேஸ்வரன்.இலியாஸ். ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.