Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ.1.68 கோடி வாடகை பாக்கி வைத்த 20 கடைகள் மூடல். ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

0

 

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ.1.68 கோடி வாடகை பாக்கி வைத்த 20 கடைகள் மூடல். -ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட சுமார் 35க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது, இந்த கடைகளில் கடந்த 18 மாதங்களாக சுமார் ஒரு கோடியே 62 லட்சத்திற்கும் மேல் ஒரு சில கடைகளில் வாடகை பாக்கி மட்டும் உள்ளது .இந்த வாடகை பாக்கி வராத கடைகளை பூட்டவும் பஸ் நிலையத்திற்குள் ஆக்கிரமிக்கப்பட்ட ஆக்கிரமிப்புகளை எடுப்பதற்காகவும் இன்று காலை மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பெயரில் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள அதிகாரிகள் தலைமையில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதில்,மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை பொறியாளர்கள் மதன்குமார், ராஜேந்திரன், கணேஷ்பாபு மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட வருவாய் உதவி ஆய்வாளர் குமரேஷ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது வாடகை பாக்கி செலுத்தாத 20 கடைகளை அதிகாரிகள் பூட்டினர். மேலும் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த கடைகள் முன்பு உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அதிரடியாக அகற்றினர் .

இந்த சம்பவத்தால் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.