திருச்சி அருகே, வரும் மக்களவைத் தேர்தலுக்கான தனது தபால் வாக்கைப் பதிவு செய்திருந்த 104 வயது முதியவர், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனது ஜனநாயக கடமையை ஆற்றிருந்தார்.
கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் வசித்து வந்த பரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்ற 104 வயது முதியவரிடம் நடமாடும் தேர்தல் வாக்கு சேகரிக்கும் குழுவினர் கடந்த 6 ம் தேதி அன்று அவரது தபால் வாக்கை அவரது வீட்டிற்கு சென்ன்று சேகரித்தனர்.
இந்நிலையில் தேர்தல் நடைபெறும் முன்னரே முதியவர் சுப்பையா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்றி விட்டு உயிரிழந்துள்ளார்.