பணத்துக்கு வாக்களிக்கும் மடமையை மாற்றுவோம் . திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
/
திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம். பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம் என பிரசாரம் செய்யப்பட்டது.
பொன்மலை ரெயில்வே
மைதானத்தில் நடைப்பெற்றது .
எனது வாக்கு விற்ப னைக்கு இல்லை, நான் தவறாமல் வாக்களிப்பேன், உறுதி மொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ. பொன்மலை சாமி தற்காப்பு கலைக்கூடம் பயிற்சியாளர் துரை.ஜீவானந்தம், மே.க.கோட்டை தினேஷ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
வாக்களிக்கும் கடமையை ஆற்றுவோம், பணத்துக்கு வாக்களிக்கும் மடைமையினை மாற்றுவோம் என்ற பதாகைகளை விளையாட்டு வீரர்கள் ஏந்தி விழிப்புணர்வு செய்ததுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் பொன்மலையடிவாரம்,பொன்மலை சந்தை பகு திகளில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வீட்டின் கதவுகள், இருசக்கர வாகனங்கள். கார்களில் ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்க மாவட்ட நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், நடைபயிற்சி கொண்டார்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள்.