மது குடிப்பதற்கு
பணம் கேட்ட மருமகனை கத்தியால் குத்திய மாமனார்.
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 61) .இவரது மருமகன் அக்னி வீரன் ( வயது 24). இவர் பால்ராஜிடம் மது குடிக்க பணம் கேட்டார்.
ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார் அதைத் தொடர்ந்து அக்னி வீரன் அவரை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பால்ராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மருமகனை குத்தினார் இதில் அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது உறவினர்கள் அக்னி வீரனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர்.