Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 2 பிரபல ரவுடிகள் கைது.

0

 

காந்தி மார்க்கெட், பாலக்கரையில்
டாஸ்மாக் பார் ஊழியர், வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு.

20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 2 ரவுடிகள் கைது.

திருச்சி மாவட்டம் முசிறி தாத்தங்கையார்பேட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜி ( வயது 32). இவர் காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் கேசியராக பணிபுரிந்து வருகிறார் .நேற்று அப்பகுதியில் ஓட்டலுக்கு டிபன் வாங்குவதற்காக சென்று விட்டு திரும்பிய போது அங்கு வந்த வாலிபர் கத்தி முனையில் பணத்தை பறித்து சென்றார்.

உடனடியாக ராஜூ கொடுத்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து ,
தேவா என்பவரை கைது செய்தார். விசாரணையில் அவர் வடக்கு தாராநல்லூரை சேர்ந்தவர் என்பதும், அவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது

.இதே போல் திருச்சி பிராட்டியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்ற வாலிபரிடம் முதலியார் சத்திரம் பகுதியில் வைத்து கத்தி முனையில் பணத்தை வழிப்பறி செய்ததாக பாலக்கரை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது .
அவர் மீதும் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.