Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் என்ற பெயரில் அடாவடியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை, அரியமங்கலம் மாநகராட்சி அதிகாரிகள் .

0

'- Advertisement -

டிவிஎஸ் டோல்கேட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த
100க்கும் மேற்பட்ட கடைகளை அடாவடியாக அகற்றிய நெடுஞ்சாலை துறை, மற்றும் அரியமங்கலம் மாநகராட்சி அதிகாரிகள்.

திருச்சி சுப்பிரமணியபுரம் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டு அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள் சென்று வர சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த சாலையை தரைக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து பழக்கடை, காய்கறி கடைகள் அமைத்து செயல்பட்டு வந்தனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை மற்றும் திருச்சி மாநகராட்சியிடம் புகார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இன்று திருச்சி
டி வி எஸ் டோல்கேட் ஹனிபாகாலனியில் இருந்து ஜெயில் கார்னர் வரை சர்வீஸ் ரோடு சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நெடுஞ்சாலை துறையினர் மற்றும் அரியமங்கலம் மாநகராட்சி அதிகாரிகள் அடாவடியாக அகற்றினார்கள்.

 

உதாரணமாக கனி சிக்கன் கடை உரிமையாளர்கள் 4 அடி தங்களது சொந்தமான இடத்தில் உள்ளே அமைத்திருந்த கடையை ஆக்கிரமிப்பு எனக்கூறி நெடுஞ்சாலை துறை அதிகாரி ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அடாவடியாக இடித்தனர் .

மேலும் அப்பகுதியில் உள்ள பழக்கடைகளையும் மற்றும் டிபன் கடைகளையும் பொக்லின் இயந்திரம் கொண்டு அடித்து உடைத்தனர் . ஐந்து நிமிடத்தில் கடைகளை அகற்றி விடுகிறேன் என்று கெஞ்சிய சிறுவனை சட்டையை கிழித்து விரட்டியடித்து அந்த கடையை உடைத்து எறிந்தனர் .

 

மாநகராட்சி ஊழியர்களிடம் இது குறித்து கேட்டபோது முன்பே தகவல் அளித்தும் அவர்கள் கடையை அகற்றவில்லை என கூறினர் . நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டும் ஆக்கிரமிப்பு அகற்ற கால அவகாசம் அளித்துள்ளனர்.

மாநகராட்சி ஊழியர்கள் பொக்லின் இயந்திரம் கொண்டு ஊழியர்கள் ஆக்கிரப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டபொழுது தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சிறிது நேரத்தில் வியாபாரிகள் அனைவரும் ஒன்று கூடி
அப்பகுதியில் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தகவல் இருந்து கே.கே. நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். மேலும் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.