தஞ்சையில் எடப்பாடி கலந்து கொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது
மணப்பாறை, லால்குடி, திருவெறும்பூர் நிர்வாகிகள் கலந்தாலோசனை.
வருகின்ற 29.02.2024 அன்று தஞ்சையில். கழக பொதுச்செயலாளர், நாளைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பான நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் கழக செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது
.
நிகழ்ச்சியில் மணப்பாறை, லால்குடி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர்.