Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கலைப்பிரிவு சார்பில் மாபெரும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள்

0

 

 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது .

திருச்சியிலேயும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில்

திருச்சி கலைப்பிரிவு மாநகர் மாவட்ட செயலாளர் ஜான் எட்வர்ட் (எ) குமார் தலைமையில் மற்றும் ஏற்பாட்டில் புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில . துணை செயலாளர் அரவிந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் .

பின்னர் அப்பகுதியில் இருந்த பொது மக்களுக்கு மட்டன் பிரியாணி அன்னதானம் ஆக வழங்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் ஜங்ஷன் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி, மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி தலைவர் மீனாட்சி சுந்தரம் , 54 ஆவது வட்டப்பிரதி அப்பு என்கிற சுப்பிரமணி, வட்டப்பிரதிநிதி மீசை முருகேசன் மற்றும் திரளான நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.