Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிறுவனிடம் 4 மணிநேரம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திருநங்கைகளுக்கு தமிழகத்தில் முதல் முறையாக ஆயுள் தண்டனை விதிப்பு.

0

 

சேலம் மாவட்டம், காக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். விடுமுறை நாட்களில் அவர் நண்பர்களுடன் விளையாடச் செல்வது வழக்கம். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அப்படி விளையாடச்சென்ற சிறுவன் மிகுந்த சோர்வுடன் வீட்டிற்கு வந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தபோது, 2 திருநங்கைகள், சிறுவனிடம் ஆசையாக பேசி, பிரியாணி வாங்கிக்கொடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இனிமேல் யார் கூப்பிட்டாலும் செல்லக்கூடாது என்று கூறியுள்ளனர். ஆனால், அதற்கு அடுத்த வாரம் மீண்டும் விளையாடச் சென்ற சிறுவனை அதே திருநங்கைகள் ஏமாற்றி அழைத்துச் சென்று 4 மணி நேரம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறுவனின் தாய் அளித்த புகாரின்பேரில் காக்காபாளையம் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகளான கார்த்திக்(எ) காயத்ரி (26), முல்லை (25) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, திருநங்கைகளான காயத்ரி, முல்லை ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இருவரும் கோவை பெண்கள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். சிறுவனுக்கு திருநங்கைகள் பாலியல் தொல்லை அளித்த சம்பவமும், அதைத்தொடர்ந்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.