Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சியின் 2024 -25 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முத்து செல்வம் தாக்கல் செய்தார்

0

 

உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து திருச்சி மாநகராட்சியின் 2024 – 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் மொத்த வருவாய் ரூ.1023.15 கோடி, செலவு ரூ. 1022.42 கோடி, உபரி ரூ. 73 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகக் கூட்ட மன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மாநகராட்சி நிதிக் குழு தலைவா் தி. முத்துச்செல்வம் பேசியது: திருச்சி விமான நிலையம் சா்வதேச தரத்திற்கு உயா்த்தப்பட்ட பின்னா் வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவா்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை வசதிகளைக் கருத்தில் கொண்டு 2024-25 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்குள் குளிா்ச்சாதன வசதிகளுடன் கூடிய பயணிகள் காத்திருப்புக் கூடம் கட்டும் பணிக்கு ரூ.16 கோடியில் நிா்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டு, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த சந்தை அமைக்க ரூ. 161.70 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, நிா்வாக அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மு. கருணாநிதி நூற்றாண்டுக் கட்டடம் கட்டும் பணிக்கு ரூ. 41 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாராகியுள்ளது. இதேபோல மாநகராட்சி மைய அலுவலகத்திற்குள் கூடுதல் கட்டடம் கட்ட ரூ.41.37 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசு அனுமதிக்கு காத்துள்ளது.

மேலும் ரூ. 310 கோடியில் பஞ்சப்பூா் முதல் கோணக்கரை கரூா் புறவழிச்சாலை வரை கோரையாறு மற்றும் உய்யக்கொண்டான் ஆற்று கிழக்குக்கரைப் பகுதியில் புறவழிச் சாலை 3 தொகுப்புகளாக அமைக்கப்படவுள்ளது.

மேலும் புத்தூா் ஈவேரா சாலைப் பகுதியில் ரூ. 14.10 கோடியில் மாநகராட்சியின் 5 ஆவது மண்டல அலுவலகம் அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. திருச்சி கொட்டப்பட்டு பகுதி குளக்கரையில் ரூ. 9.90 கோடியில் நடைபாதை உணவகம் செல்பி பாயிண்ட், உயா் மின் கோபுர விளக்கு மற்றும் கழிவறை வசதியுடன் கூடிய பொழுதுபோக்குத் தலமாக மேம்படுத்தப்படும். திருச்சி குழுமணி ரோடு முதல் தியாகராஜ நகா் வரை ஆா்சிசி பாலப் பணிக்கு ரூ. 2.52 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி 5 ஆவது வாா்டு சிவப்பிரகாசம் சாலையில் உழவா் சந்தை எதிரே பெருநகரங்களில் உள்ளவாறு உணவுத் தெரு ரூ. 2.25 கோடியில் அமைக்கப்படும். திருச்சி மாநகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை முறையாகக் கையாண்டு, மறு பயன்பாடு செய்யும் வகையில் எஸ்பிஎம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 35 கோடியில் நாள் ஒன்றுக்கு சுமாா் 100 மெட்ரிக் டன் கையாளும் திறன் கொண்ட பயோ எரிவாயு உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். மேலும் மக்காத குப்பைகளை முறையாகக் கையாண்டு அப்புறப்படுத்த ரூ. 35 கோடியில் 200 மெட்ரிக் டன் கையாளும் திறன் கொண்ட பொருள் மீட்பு (சேகரிப்பு) மையம் அமைக்க விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதி சாலைகளில் சுமாா் 83 கி.மீ. நீளத்திற்கு மண் சாலைகளை படிப்படியாக தாா்ச் சாலைகளாகவும், சிமென்ட் கான்கிரீட் சாலைகளாகவும் பேவா் பிளாக்குகள் பொருத்தப்பட்ட சாலைகளாகவும் தரம் உயா்த்த ரூ. 50 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் 65 வாா்டுகளிலும் சுமாா் 52 கிமீ நீளத்திற்கு புதிதாக மழைநீா் வடிகால் கட்டுதல் மற்றும் நடைபாதையுடன் கூடிய மழைநீா் வடிகால் கட்டுதல் பணிகளை ரூ. 32 கோடியே 50 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.மேலும் மாநகரில் புதிதாக ரூ. 17.68 கோடியில் 10 இடங்களில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படும். 4 கட்டங்களாக நடைபெறும் புதை வடிகால் திட்டப்பணிகளில் விடுபட்ட பகுதிகளுக்கும் 5 ஆம் கட்டமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

திருச்சி பஞ்சப்பூா் பகுதியில் ஒருங்கிணைந்த சந்தை அமைக்கப்பட்ட பிறகு காந்தி சந்தையில் புதிதாக அரசு அலுவலகங்களுடன் கூடிய சில்லறை வியாபாரிகளுக்கான வணிக வளாகமும், மேலும் அருகில் உள்ள வாழைக்காய் சந்தையில் புதிதாக வணிக வளாகமும் அமைக்கப்படும் என்றாா் அவா்.

Leave A Reply

Your email address will not be published.