Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் 4 சக்கர வாகன ஆலோசகர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் ராக் சிட்டி ஆட்டோ கன்சல்டிங் அசோசியேஷன் மனு .

0

 

திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நல சங்க தலைவர்
சுரேஷ் பாபு (எ) சுகந்தி ராஜா தலைமையில் பல்வேறு சங்க நிர்வாகிகள் முன்னிலையில் கலெக்டர் பிரதீப் குமாரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அதில் குறிப்பிட்டதாவது:
போக்குவரத்து அலுவலகங்களில் புதிய நடைமுறை மாற்றங்கள் மற்றும் ஆன்லைன் அபராதம் தொடர்பாக தமிழ்நாட்டில் மோட்டார் வாகன தொழில் சார்ந்த பழைய நான்கு சக்கர வாகனம் வாங்கி விற்று கொடுக்கின்ற தொழிலாளர்கள் அனைத்து மாவட்ட கிளை சங்கங்களை ஒருங்கிணைக்கப்பட்டு கிட்டதட்ட இந்த தொழில் சார்ந்தவரக்ள குறைந்தபட்சம் இருபது லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த மோட்டார் வாகன தொழிலை சார்ந்து இருக்கிறோம். தற்போது உள்ள புதிய நடைமுறைகளால் எங்களது தொழில் சார்ந்தவர்கள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

பெயர் மாற்றம் செய்ய பழைய வாகன உரிமையாளரின் மொபைல் எண் மற்றும் ஆதார் கேட்பது வாகனத்திற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த வாகன உரிமையாளரின் பழைய மொபைல் நம்பரை கேட்டு அதில் வரும் OTP யை பதிவு செய்யும் பட்சத்தில் அபராத தொகையை செலுத்த முடியாததின் காரணம் வாகனத்தை விற்றவர்கள் OTP யை சொல்ல மறுக்கிறார்கள்,

பெயர் மாற்றம் செய்தால் தற்போது நடைமுறையில் உள்ள முதல் வாகன உரிமையாளர்களிடமிருந்து இரண்டாவது வாகன உரிமையாளர்க்கு மாறும் போது
தற்போது உள்ள அதிகபட்ச ஹெல்மெட் பைன் ரூபாய் 1000 இது ஒரு சாமானிய மக்களின் மூன்று நாள் குடும்பச் செலவாகும்.
அதனை நீக்கிட வலியுறுத்தி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கலெக்டர் பிரதீப் குமாரிடம் அளிப்பதற்காக ஊர்வலமாக வந்து மனு அளித்தனர்.

இதில் செயலாளர் ஜேம்ஸ் துணைத் தலைவர் அகஸ்டின் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்க தலைவர் சுப்பிரமணி, செயலாளர் செல்வம், துணை செயலாளர் பிலோமின்,
ராக் சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்ப்பர் அசோசியேசன் தலைவர் சேகர், செயலாளர் அர்ஜுனன், பொருளாளர் ஷாஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.