திருச்சி பள்ளி மாணவனை ஓரினசேர்க்கைக்கு அழைத்த கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது.
மகளிர் போலீசார் நடவடிக்கை.
திருச்சி கருமண்டபம் ராம் நகரை சேர்ந்தவர் அயன் ஸ்டில் பாலா (வயது 55) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவரது வகுப்பில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவரை தனது வீட்டுக்கு டியூஷன் கற்றுக் கொடுக்க அழைத்துள்ளார்.
சம்பவத்தன்று அந்த மாணவனும் ஆசிரியர் அயன் ஸ்டிங் பாலா வீட்டிற்கு சென்று உள்ளார். அப்பொழுது ஆசிரியர் அயன்ஸ்டீன் பாலா பள்ளி மாணவனிடம் செக்ஸ் தொல்லையில் ஈடுபட முயற்சி செய்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த பள்ளி மாணவன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் அந்த மாணவனை அழைத்துக் கொண்டு திருச்சி குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்,
இதை தொடர்ந்து திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பள்ளி ஆசிரியர் அய்ன்ஸ்டிங் பாலாவை கைது செய்துள்ளனர்.