Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கே கே நகரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் 50 கிலோ பறிமுதல். ஒருவர் கைது

0

'- Advertisement -

 

பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சிராப்பள்ளி கே.கே.நகர் பகுதி தென்றல் நகரில் வசித்து வரும் விஸ்வநாதன் என்பவரின் மகன் கார்த்திக் என்ற நபரின் திருப்பதி டீ கடையில் ஆய்வு செய்தபோது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சந்தேகத்தின் பேரில் அவரது வீட்டை ஆய்வு செய்தபோது அவரது வீட்டில் சுமார் 50 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பிற கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததை தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், மேற்படி நபர் மீது வழக்கு போடுவதற்காக 6 சட்டப்பூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபரை கே.கே. நகர் காவல் துறையிடம் மேல்நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், பொதுமக்களும் தாங்கள் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக சந்தேகித்தால் உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.