Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விழாக்களில் மீதமாகும் உணவு வீணாகாமலிருக்க இலவச வாகனச் சேவையை தொடங்கிய திருச்சி காவலர் .

0

 

திருச்சியில் இல்லங்கள் மற்றும் விழாக்களின் போது மீதமாகும் உணவுகளை சேகரித்து ஆதரவற்றோா் காப்பகங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் அளிக்க நடமாடும் வாகனச் சேவையை திருச்சி காவலா் பயிற்சிப்பள்ளி காவலர் ஒருவா் தொடங்கியுள்ளாா்.

இல்லங்களில் நடக்கும் திருமணம், பிறந்தநாள், காதணி மற்றும் தனியாா் அமைப்புகள் நடத்தும் விருந்துகளில் மீதமாகும் உணவை என்ன செய்வதெனத் தெரியாமல் குப்பைகளில் கொட்டுகின்றனா். ஆதரவற்றோா், காப்பகங்கள், முதியோா் இல்லங்களில் அதைக் கொடுக்க வேண்டுமென்றால் ஆட்டோ, வேன்களுக்கான வாடகை அதிகம் ஆகும்.

இதுபோன்ற நிலையை கருத்தில் கொண்டு, திருச்சி நவல்பட்டு காவலா் பயிற்சி பள்ளியைச் சோந்த காவலா் அரவிந்தன் (வயது 32) என்பவா் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளாா்.

இதற்கென பிரத்யேக வாகனம் ஒன்றை (ஆம்னி வேன்) தனது நான்கு ஆண்டு சேமிப்பு ரூ.1 லட்சத்தில் வாங்கியுள்ளாா். இதன் மூலம் திருச்சி மாநகா் மற்றும் புறநகர் பகுதி விழாக்களில் மீதமாகும் உணவுகளை சேகரித்து, திருச்சியில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோா், ஆதரவற்றோா் இல்லங்களுக்கு கொண்டு செல்ல வேனை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.

இந்த வாகனத்தை மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி.நீலமேகம், ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி. கோவிந்தசாமி, கோ. ஜீவா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

மாக்மாஸ் டிரஸ்ட் சாா்பில் நடந்த விழாவில் மீதமிருந்த உணவை வாங்கி கிராப்பட்டியில் உள்ள கங்காரு கருணை இல்லத்துக்கு அனுப்பினா். எனவே, இதுபோல விழாக்களில் உணவை மீதமானால் 83009-02015, 99622-55282 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவித்தால் போதும். உணவுகளை ஆதரவற்றோா் மற்றும் காப்பகங்களில் சோக்க வேனை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதுகுறித்து அரவிந்தன் கூறியது:

நான் 2011 ஆம் ஆண்டு முதல் ரத்த தானம் வழங்கல், மற்றும் முடிந்த உதவிகளை காப்பகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு செய்கிறேன். எனது 4 ஆண்டு சேமிப்புப் பணம் மூலம் இந்த வேனை வாங்கி, விழாக்களில் மீதமாகும் உணவை பசித்தோருக்கு பகிா்ந்தளிக்கும் முயற்சியைத் செயல்படுத்தியுள்ளேன். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் வாகனத்தை நானே இயக்குவேன். வேலையிலிருந்தால் எனது நண்பா்கள் மூலம் இச்சேவையை வழங்க ஏற்பாடு செய்துள்ளேன் என்றாா் அவா்.

இவர் ஏற்கனவே திருச்சியில் உள்ள மாணவ மனைவிகளுக்கு இலவசமாக சிலம்பம் கற்று தந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.