Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி முன்னாள் மாணவர்கள் 38 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் .

0

 

புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பழைய நினைவுகளை பகிர்ந்தனர்.

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் 1986 ல் எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவர்களின் 38-வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் பள்ளி தாளாளர் ராஜேந்திரன்,
தலைமை ஆசிரியர் அகஸ்டின் பொன்னையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பின்னர் விழாக் குழுவினர் அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.

 


நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் கிஜி, ஜீவா, நந்தகுமார், முருகானந்தம், இளங்கோவன், லோகராஜ், செல்வகுமார். ஹேமந்த் நரேந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.