திருச்சி கே.கே. நகரில் கல்லூரி மாணவி மாயம்.

திருச்சி திருவெறும்பூர் பிஹெச்எல் டவுன்ஷிப் பகுதி சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகள் ரோஜா (வயது 23) இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை இது குறித்து அவரது உறவினர் கிருஷ்ணராஜ் என்பவர் கே.கே. நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரோஜாவை தேடி வருகின்றனர்.