திருச்சியில் கஞ்சா, ஆயுதங்களுடன் 7 பிரபல ரவுடிகள் கைது.
திருச்சியில் கஞ்சா ,ஆயுதங்கள்
திருடப்பட்ட இருசக்கர வாகனங்களுடன் ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
பாலக்கரை காவல் சரகத்திற்கு உட்பட்ட முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி அல்லா பிச்சை இவர் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அல்லாபிச்சை பதுக்கி வைத்திருந்த
3 கிலோ கஞ்சா ,
கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்
அல்லா பிச்சை உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து பாலக்கரை சரக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஞ்சா, ஆயுதங்களுடன் ரவுடிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.