திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் இருந்து
வாலிபர் குதித்து தற்கொலை
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அல்லாஹ் பிச்சை இவருக்கு முகமது ரியாஸ் (வயது 22) முகமது ரிஸ்வான் (வயது 20 ) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதில் முகமது ரியாஸ் டிப்ளமோ வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று உடல்நிலை குறைவால் அல்லா பிச்சை இறந்து விட்டார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு இறுதிச்சடங்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. விட்டார் உறவினர்கள் அங்கு சோகத்துடன் திரண்டு இருந்தனர்.
இந்த நிலையில் முகமது ரியாஸ் திடீரென வீட்டிலிருந்து வெளியேறினார் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தனர்,
இந்த நிலையில் திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் இருந்து முகமதுரியாஸ் கீழே குதித்து உயிருக்கு போராடினார் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பல அளிக்காமல் முகமது ரியாஸ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.