Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை ‘

0

 

திருச்சியில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றிய விவரம் வருமாறு :-
திருச்சி காஜாமலை முஸ்லிம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மகன் முகமது சிராஜுதீன் (வயது 33).இவர் மன்னார்புரத்தில் உள்ள பழைய பேப்பர் ஸ்டோர் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மகளிர் சுய உதவிக் குழுவில் பணம் எடுத்து, பணத்தை கணவரிடம் கொடுத்துள்ளார். பின்னர் வேலைக்கு சென்று விட்டு திரும்பிய கணவனிடம் பணம் குறித்து கேட்டுள்ளார். இதில் தகராறு ஏற்பட்டது. பின்னர் மனைவியிடம் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு அறைக்குள் சென்ற முகமது சிராஜுதீன் வீட்டில் மின்விசிறியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி சர்மிளா பேகம் கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.