திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார்.
இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர் பகஸ்லின்
( வயது 20).
இவரது நண்பர் திருச்சி பாலக்கரையை சேர்ந்த
விக்ரம் (வயது 20).
கல்லூரி படிப்பை முடித்த இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனம் ஒன்றில் திருவானைக்காவல், கொண்டையம்
பேட்டை என்ற இடத்தில்
திருச்சி – சென்னை பைபாஸ் சாலையை குறுக்கே கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் அவ்வழியே நடந்து சென்ற
ராஜேஸ்வரி (வயது 65)
என்ற பெண் மீது அதே கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.