Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் கவுன்சிலர்களின் காரசார விவாதம் முழு விபரம் .

0

'- Advertisement -

 

திருச்சி மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் நாராயனண் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன் , துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி துணை ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசும்பொழுது
மழைக்காலம் தற்பொழுது நடந்து வருவதால் மழை நீர் தேங்காமல் இருக்க திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வருங்காலத்திலும் மழை நீர் தேங்காமல் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், ஒத்துழைப்பு தர வேண்டும்.

டெங்கு கொசு திருச்சி மாநகராட்சியில் எங்கும் கிடையாது. இதே நிலையை நாம் தொடர்ந்து சிறப்பாக பணி செய்ய வேண்டும்.
மழைநீர் தேங்கும் இடங்களில் மின் மோட்டார்கள் நல்ல முறையில் செயல்பட அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வர வேண்டும் என்று பேசினார்.
சுரேஷ்(மார்க்சிஸ்ட் (கம்யூனிஸ்ட்) எனது வார்டில் நகர்புற வாழ்வு மையம் கொண்டு வர வேண்டும். மேலும் எனது வார்டில் குடிநீர் சரியாக வருவதில்லை. ஆகவே அந்தப் பகுதியில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ் (இ. கம்யூனிஸ்ட்) எனது வார்டு பகுதியில் போடாமல் இருக்கும் சாலையை விரைந்து அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால் முறையாக அமைத்த பிறகு தார் சாலை அமைக்க வேண்டும்.சில நேரங்களில் குடிநீர் மஞ்சளாக வருகிறது. இதனை ஆய்வு செய்ய சரியான வழி இல்லாமல் இருக்கிறது. எனவே குடிநீர் பாதுகாப்பாக பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் நம்முடைய மாநகராட்சி சார்பில் குடிநீர் ஆய்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேயர் அன்பழகன்: குடிநீர் தூய்மையாக இருக்கிறதா என்பதை கண்டறிய கம்பரசம்பேட்டையில் குடிநீர் தூய்மை ஆய்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்பீஸ் முத்துக்குமார் (மதிமுக) எனது வார்டில் இரவு நேரத்தில் மாடுகள் தொல்லை அதிகமாக இருக்கிறது.இந்த மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபாகரன் (வி.சி.சி.) மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதரவற்ற இல்லத்தில் தங்கி இருப்பவரிடம் அங்கு உள்ளவர்கள் பணம் வசூல் செய்வது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனது வார்டில் சுகாதார நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளநிலை பொறியாளர்கள் அலுவலகத்தில்
கணினிகள் நல்ல முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்பிகாபதி அதிமுக: வயர்லெஸ் ரோட்டில் சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே சமயத்தில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு சாலைகள் எடுக்கப்படுகிறது என்று வதந்தி பரவுகிறது.

நாகராஜன் (திமுக) – ஆரம்ப சுகாதார நிலையங்களில்நெபுலைசர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வயலூர் சாலையில் மழை நீர் வடிகால் சரியாக கட்டப்படாத காரணத்தால் சாக்கடை நீர் தேங்கி கொண்டு செல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது.அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர் அன்பழகன் :- நெடுஞ்சாலை துறையினர் இந்த பணியை மேற்கொண்டதால் சரியாக செய்யவில்லை. இதனை சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பன்னீர்செல்வம் (திமுக): சத்திரம் பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஞ்சபூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களோடு வெளியூர் பஸ்கள் சத்திரம் பேருந்து நிலையத்தில் வேறு இடத்தில் நிற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேயர் அன்பழகன் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் விரைவில் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள வெளியூர் பஸ்கள் அனைத்தும் பஞ்சபூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சத்திரம் பேருந்து நிலையத்தில் டவுன் பஸ்கள் மட்டும் செயல்படும்,

பைஸ் அகமது (ம.ம.க.):எனது வார்டில் கோழிகழிவுகள் அதிகமாக கொட்டப்படுகிறது இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
தென்னூர் உழவர் சந்தை பகுதியில் காலியாக உள்ள இடத்தில் ஏதேனும் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில்நாதன் (அமமுக).எனது வார்டில் நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது, அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமல் முஸ்தபா (தி.மு.க.):–
தென்னூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கனகா நடுநிலைப்பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாணவர் சேர்க்கை 600ரில் இருந்து 100 ஆக குறைந்து விட்டது. ஆகவே பள்ளியில் இருக்கும் பழமையான கட்டிடத்தை இடித்துவிட்டு மாநகராட்சி சார்பில் ஒரு புதிய கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளிமிக்கரை சாலையில் கோழி கழிவுகளை சேகரிக்கும் பணிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்.

எல்.ஐ.சி. சங்கர்
மரக்கடை பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி உடைக்கப்பட்டு புதிதாக கட்டப்படுகிறது. இந்தப் பணிகளை வேகப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும்.

செந்தில் (தி.மு.க.).
எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில்
குடிநீர் பிரச்சினை 12 தெருக்களில் உள்ளது.
அதனைப் போக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள புதிய குடிநீர் தொட்டி அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும்.
கூட்டத்தில் தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் வார்டு குறைகளை பற்றி பேசினார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.