Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பூட்டிய வீட்டில் ஆசிரியையின் கணவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு.

0

 

திருச்சி அரியமங்கலத்தில் அழுகிய நிலையில் ஆசிரியையின் கணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் கல்யாணராமன் தெருவை சேர்ந்தவர் குருநாதன் .இவரது மகன் பாபுராஜ் (வயது 48). லோடுமேன். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி அபிராம சுந்தரி (வயது 44). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ரோஷினி என்கிற மகளும், நிகில் என்கிற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் பாபுராஜ் மனைவி, குழந்தைகளை பிரிந்து தனியாக ஜெகநாதபுரத்தில் அம்மாவுடன் வசித்து வந்தார், பாபுராஜின் அம்மா வெளியூருக்கு சென்ற நிலையில் பூட்டியிருந்த வீட்டை திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் பாபுராஜ் பிணமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி அபிராம சுந்தரி அளித்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.