Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி முன்னிட்டு அனுமதி நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 50 பேர் மீது வழக்கு பதிவு.

0

 

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை யடுத்து
அன்று காலை 6 மணி முதல் 7மணி வரையிலும் இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

ஆனால் பொதுமக்கள் நேற்று அனைத்து இடங்களிலும் விதிமுறையை மீறி விடியற்காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்து தள்ளினார்கள்.

திருச்சி மாநகரில் அரசு அறிவித்த நேரத்தை தவிர்த்து விதிமுறையை மீறி பட்டாசு வெடித்ததாக போலீசார் பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் திருச்சி மாநகர் பகுதிக்கு உட்பட்ட கண்டோன்மென்ட், காந்தி மார்க்கெட், பாலக்கரை, பொன்மலை, உறையூர்,தில்லை நகர், ஸ்ரீரங்கம்,விமான நிலையம்,செசன்ஸ் கோட் ,எடமலைப்பட்டி புதூர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விதிமுறையை மீறி பட்டாசு வெடித்ததாக 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று திருச்சி புறநகரில் பல்வேறு இடங்களில் வெடி வெடித்தாக 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.