Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி எஸ்.ஆர்.இ.எஸ் ஆர்ப்பாட்டம்.

0

 

பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.இ.எஸ் ஆர்பாட்டம்.

இரயில்வே தொழிலாளர்களுக்கான உத்தரவாதம் இல்லாத புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக மத்திய அரசை வலியுறுத்தி பொன்மலை எஸ்.ஆர். ஈ.எஸ் தொழிற்சங்க பணிமனைகோட்ட தலைவர் எல். பவுல் ரெக்ஸ் தலைமையில், துணைப்பொதுச்செயலாளர் எஸ்.ரகுபதி முன்னிலையில் நிர்வாகிகள் பாலமுருகன், ஆசைதம்பி, ஞானசேகர், கோரி முகமது, சாம்சன், செல்வகுமார், ஜோசப் சேகர்,மதன்குமார், சிதம்பரம், வெங்கட் நாராயணன், சீனிவாசன், சேசுராஜா, ஜார்ஜ் ஸ்டீபன் , சுந்தர்ராஜன், சுந்தர் மற்றும் ஏராளமான இரயில்வே தொழிலாளர்கள், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கலந்த கொள்ள

நிலுவையிலுள்ள 18 மாத பஞ்ச படியை உடனடியாக அரியர்ஸாக வழங்கிடவும், பணிமனைகளில் தனியார்மயம் கண்டித்தும் கண்டன முழக்க கோஷம் மத்திய அரசுக்கு எதிராக எழுப்பி பெருந்திரள் ஆர்பாட்டம் பொன்மலை ரயில்வே பணிமனை ஆர்மரிகேட் வாயில் முன்பாக இன்று நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.