Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்க விழாவில் திரளானோர் பங்கேற்க திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு.

0

 

திருச்சி மாநகர் மாவட்ட அஇதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் -52 ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்:

தீயசக்தியை அடியோடு வேரறுக்க தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கழக நிறுவனர் எம்.ஜி.ஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு

ஜெயலலிதாவால் இராணுவ கட்டுக்கோப்போடு கட்டிக்காத்த மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 17.10.2023 செவ்வாய் கிழமையன்று 52-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில்

கழகம் காத்த பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி

கழக அமைப்பு செயலாளர், கழக வழிகாட்டு குழு உறுப்பினர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி வழிகாட்டுதலின் படி

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பாக, நாளை (17.10.2023 செவ்வாய் கிழமை) காலை 10:00 மணியளவில் திருச்சி நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள
எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது

அதுசமயம் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், கழக பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், நிர்வாகிகள்,வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மாநகர் மாவட்ட கழக செயலாளர்
முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.