Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் குடும்பத்துடன் விஷம் அருந்திய 3 பேரில் 2 பேர் பலி.ஒருவர் கவலைக்கிடம்.

0

 

ஸ்ரீரங்கத்தில்
விஷம் குடித்த தாய்,மகன் சாவு

தந்தை உயிர் ஊசல்’

ஸ்ரீரங்கத்தில்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்ததில் தாய்,மகன் இறந்துள்ளார். தந்தை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி,
திருவரங்கம், மேலவாசலை சேர்ந்தவர் மோகன் (வயது 70)
இவருக்கு சிவகாமி (வயது 60)
என்ற மனைவியும்
தினேஷ் (வயது36) என்ற மகனும் உள்ளனர்.
மூத்த மகன் செந்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில் தினேஷ் மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவர் குணமடையாதால் விரக்தி அடைந்த மோகன் தனது மனைவி, மகன் ஆகியோருடன் நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
நேற்று அதிகாலை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மோகன் உள்ளிட்ட மூவரும் வாயில் நுரை தள்ளியவாறு
மயங்கி கிடப்பது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய மூவரையும் மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மகன் தினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் இன்று காலை தாய் சிவகாமி பரிதாபமாக இறந்தார்.

ஆபத்தான நிலையில் மோகன் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில் தாய்,மகன் விஷம் குடித்து இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும்
சோகத்தை ஏற்படுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.