திருச்சி மளிகை கடை ஊழியர்களிடம் ரூ.37 லட்சம் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மீது வழக்கு பதிய காவல்துறை மறுப்பு.காந்தி மார்க்கெட் மளிகை கடை வியாபாரிகள் காவல் நிலையம் முற்றுகை
திருச்சி காந்தி மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் கே டி எம் ஜெயக்குமார் இவரது கடையில் வேலை பார்ப்பவரிடம் ரூ.37 லட்சம் பணத்தை தலைமை தபால் நிலையம் அருகில் வைத்து அரிவாள் முனையில் கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர் .
இந்த சம்பவத்தில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பெண் வக்கீல் உள்பட மூன்று வக்கீல்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
3 பேரும் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளனர்.
பணம் திருச்சி இபி ரோட்டில் உள்ள ஒருவரின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது வழக்கறிஞர்கள் பணத்தை திருச்சி நீதிமன்றம் வளாகத்தில் பங்கு வைத்ததும் அதற்கான வீடியோ ஆதாரங்களும் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கறிஞர்கள் பணத்தை திருப்பி தந்து விடுகிறோம் வழக்கு பதிய வேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
தற்போது வக்கீல்கள் 3 பேரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி கண்டோன்மென்ட் குற்ற பிரிவு காவல் நிலையத்தை காந்தி மார்க்கெட் மளிகை மற்றும் வெல்லமண்டி ஆயில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கண்டோமென்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.