திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் ஜி. மணிகண்டனுக்கு தமிழக அரசின் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் சிறந்து விளங்குவோருக்கு அண்ணா பிறந்தநாளன்று அண்ணா விருது அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு அண்ணா விருதுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 100 போலீஸாா் தேர்வு செய்யப்பட்டனா்.
இதில், பணியில் சிறந்து விளங்கியதற்காக திருச்சி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் ஜி. மணிகண்டனுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.